×

சொந்த ஊரில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்களித்தார்

புதுக்கோட்டை, ஏப்.19: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தீயத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் ஒரு மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் தனது வாக்கதை நேற்று பதிவு செய்தார். திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் தனது சொந்த ஊரான மணமேல்குடி அருகே உள்ள தீயத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அங்கு, திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குச்சாவடியில் காத்திருந்தார். அவருடன் மகன் ராமச்சந்தினும் காத்திருந்தார். அதன்பிறகு, இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வந்து தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

Tags : Tirunavukkarar ,Congress ,city ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு