×

அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரி அன்னசாகரம் அரசு நடுநிலைப்பள்ளியிலுள்ள வாக்குசாவடி மையத்தை, பாமக ேவட்பாளர் டாக்டர் அன்புமணி நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 39 நாடாளுமன்ற தொகுதி பொது தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். எங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர். வலிமையான இந்தியா, வளமான தமிழகம் படைத்திட மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும். நதிநீர் இணைப்பு, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு மூலம், தமிழகத்தில் 25 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த நதிநீர் இணைப்பு மூலம், தமிழகத்திற்கு 200டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணி தொடங்கும் நிலையில் உள்ளது,’ என்றார்.

Tags : AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...