×

ஆலங்குளம் அருகே விபத்தில் சேகரகுரு பலி

ஆலங்குளம், ஏப். 19:  பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் ராபர்ட் மகன் ரிச்சர்ட் சாமுவேல் (32). இவர், கீழச்சுரண்டையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சேகரகுருவாக உள்ளார். நேற்று ரிச்சர்ட் சாமுவேலும், உறவினரான ஜோன்ஸ்(22) என்பவரும் பைக்கில் ஆலயத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு நெல்லை சென்றனர். புத்தகங்கள் வாங்கிவிட்டு மாலையில் சுரண்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாறாந்தை அருகே வரும்போது கேரளாவில் இருந்து நெல்லை நோக்கி வந்த லோடு ஆட்டோவும், இவர்களது பைக்கும் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிச்சர்ட் சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த சீதபற்பநல்லூர் போலீசார், காயமடைந்த ஜோன்சை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிச்சர்ட் சாமுவேல் உடலை கைப்பற்றி  பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,Alankulam ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...