×

டிராக்டர் மோதி வாலிபர் பலி

வைகுண்டம், ஏப்.19: வைகுண்டம் அருகே உள்ள பேரூரைச் சேர்ந்தவர் முருகையா மகன் பூல்பாண்டி (35). இவர் நேற்று மாலை பைக்கில் பாட்டக்கரையில் இருந்து ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பூல்பாண்டி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கப் பெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பூல்பாண்டி பாட்டக்கரையில் உள்ள கோயிலில் பூஜை செய்யும் பணி செய்து வந்தார்.

Tags : young lady ,
× RELATED வாலிபருடன் இளம்பெண் ஓட்டம் போலீசில் பெற்றோர் புகார்