பெங்களூரு: கன்னட நடிகர் சுதீப் பிறந்த நாளை ஒட்டி அவரது கட்- அவுட் முன்பு திரண்ட ரசிகர்கள், எருமை மாட்டை பலி கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான நான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சுதீப் அதன் பின்னர் பாகுபலி புலி உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் நடிகர் சுதீப் தனது 50வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் கட் – அவுட் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு பிறந்தநாளை கொண்டாடினர்.எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப், வாழ்க்கை என்ற குரல் எழுப்பியவாறு மாட்டின் தலையை அரிவாளால் துண்டித்தனர். பின்னர் ரத்தத்தை எடுத்து சுதீப் கட்-அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். பெரும் பரபரப்பய் ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது பெல்லாரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post நடிகர் சுதீப் பிறந்த நாள்… எருமை மாட்டை வெட்டி, ரத்தத்தை கட்-அவுட்டில் தெளித்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்!! appeared first on Dinakaran.