×

பள்ளி ஆண்டு விழா

பாபநாசம், ஏப்.18: பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை நடராஜா உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. வட்டாரகல்வி அலுவலர் பேபி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பெரியசாமி வரவேற்றார். தலைமையாசிரியை வசந்தா பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். அண்ணாமலை, ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி வாழ்த்திப் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

Tags : festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...