×

தில்லைவிளாகம் வீரகோதண்டராமசுவாமி கோயிலில் ராமநவமி பெருவிழா

முத்துப்பேட்டை. ஏப்.18:  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ள வீரகோதண்டராம சுவாமி கோயில் புகழ்பெற்ற ஒரு கோயிலாகும். இதற்குகென தமிழகம் முழுவதும் பக்தர்கள் உண்டு. இந்த  கோயிலில் ஒவ்வொரு வருடமும் ராமநவமி வருட விழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 15ம்தேதி ராமநவமி வருட பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் கோயில் உபயதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்  நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா நடைப்பெற்றது.  தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோயில் நிர்வாகிகள், கிராமமக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ramanavami ,
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்