திருத்துறைப்பூண்டி, ஏப்.18: திருத்துறைப்பூண்டி வேதை சாலையிலுள்ள மஹான் ஹக்கிம்ஷா ஒலியுல்லா 144வது ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் இரவு மார்க்க சொற்பொழிவு தொடர்ந்து ரவுளா ஹரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது. இதில் ஜமாத் தலைவர் முகமது யாசீன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் 19ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.