×

நாகர்கோவிலில் மழை வெள்ளம் சூழ்ந்த வாக்குச்சாவடி

நாகர்கோவில், ஏப். 18:  குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் திடீரென்று கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த நிலையில் இந்த சாக்கடை வெள்ளம் நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்க பள்ளி வளாகம் முழுவதும் சூழ்ந்தது. படிக்கட்டுகள் வரை நிரம்பியது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களுடன் வந்த தேர்தல் அலுவலர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பள்ளி வளாக பகுதியில் ஏற்கனவே மழைக்காலங்களில் சாக்கடை வெள்ளம் தேங்குவது தொடர்பாக பள்ளி நிர்வாக தரப்பில் புகார்கள் அளித்திருந்த போதும், நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெற்ற போதிலும் அதிகாரிகளும் இதனை சரிசெய்யவில்லை. இன்றும் மழை நீடிக்கும் தருவாயில் வாக்களிக்க வாக்காளர்கள் செல்வது பெரும் சிரமமாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...