×

வாழப்பாடி அருகே காப்பு காட்டில் மான் வேட்டையாடிய 4 பேர் கைது

வாழப்பாடி, ஏப்.18: சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவின் விளாம்பட்டி காப்புகாடு செங்காட்டூர் வனக்காவல் எல்லையில் சின்ன வேலாம்பட்டி அருகே கோவேரி காட்டில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 இதையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜ் உத்தரவின்பேரில் வனவர்கள் குமரேசன், சிவகுமார், வனக்காப்பாளர்கள் மாணிக்கம், ஜெயக்குமார், ஜெயராமன், சின்னத்தம்பி, முனீஸ்வரன் மற்றும் தோட்டக் காவலர் முத்தையன் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மான் வேட்டையாடி அதன் கறியை கூறுபோட்டு சமைத்துக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர். வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்ற சின்னவேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி(23), தர்மன்(39), சண்முகம்(45), சின்னசாமி(37) ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து குழம்புடன் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது. அவர்களுக்கு தலா ₹20,000 வீதம் ₹80,000 அபராதம் விதித்து சேலம் மாவட்ட வன அலுவலர்  பெரியசாமி உத்தரவிட்டார்.

Tags : resort ,backyard forest ,
× RELATED கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம்