×

திருச்செங்கோட்டில் பாரா சிட்டிங் வாலிபால் அணிகளுக்கு பயிற்சி முகாம்

திருச்செங்கோடு, ஏப்.18: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சிட்டிங் வாலிபால் போட்டிகள்,  மலேசியா கோலாலம்பூரில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க, இந்தியா சார்பில் 12 வீரர்களும், 12 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு, முதன்முறையாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி வளாக உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் வழியனுப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கேஎஸ்ஆர் கல்வி குழுமத்தின் துணை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பாரா ஒலிம்பிக் வாலிபால் கழகத்தின் பொது செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இந்திய பாரா சிட்டிங் வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரா சிட்டிங் வாலிபால் கழகத்தின் தலைவர் குருராஜன், கல்லூரி முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், வெங்கடேசன், எஸ்பிகே பள்ளிகளின் தலைவர் பிரபுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Training camp ,volleyball teams ,Tiruchengode ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்