×

தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் சொந்த ஊரில் வாக்களிக்க இளைஞர்கள் படையெடுப்பு:

மதுராந்தகத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்

சென்னை, ஏப்.18: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலில் வாக்களிக்க நேற்று மாலை பொதுமக்கள், இளைஞர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்வி, வேலை, தொழில், வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று காலை முதல் தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பஸ்களில் சென்றனர். இதனால், அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் தங்களின் வாக்கு செலுத்தும் கடமையை நிறைவேற்ற சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோன்று சென்னைக்கு அருகையில் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், நேற்று மாலை முதல் இருசக்கர வாகனங்களில் அலை அலையாக தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த தேர்தல் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Tags : Tamils ,Lok Sabha ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு