×

தமிழ் இலக்கிய மன்ற விழா

காரைக்குடி, ஏப்.18: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நான்காவது தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் அம்பிகா வரவேற்றார். கல்லூரி தாளாளர் சேதுகுமணன் தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் பாபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் ராதாகிருஷ்ணன், திட்டமிடல் இயக்குநர் கோபால், தமிழ்மன்ற செயலாளர்கள் அருண்குமார், யாழினி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் 2019ம் ஆண்டின் புத்தகத்தை வெளியிட்டார். விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்தல், சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Tags : Tamil Literary Festival ,
× RELATED கொம்மடிக்கோட்டை பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா