×

எலிபேஸ்ட் தின்று இளம்பெண் சாவு

விருத்தாசலம், ஏப். 18: விருத்தாசலம் அருகே உள்ள எ.வடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் ரஞ்சனி (16). 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக ரஞ்சனி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த ரஞ்சனி, கடந்த 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த உறவினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சனி இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் மகாலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Eliphand ,young lady ,
× RELATED வாலிபருக்கு சரமாரி வெட்டு