×

பிறந்த 5 நாளில் பெண் சிசு இறப்பு

சின்னசேலம், ஏப். 18:  சின்னசேலம் அருகே தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் வெங்கடேசன்(31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவரது மனைவிக்கு கடந்த 11ம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி அந்த குழந்தைக்கு கடந்த 16ம் தேதி சொட்டு மருந்து போட்டுள்ளார். சொட்டு மருந்து குடித்த ஒரு மணி நேரத்திலேயே அந்த சிசுவின் வாயில் நுரை தள்ளியது. இதையடுத்து அவர்கள் மேல்நாரியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெண் சிசு இறந்து விட்டது. இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : birthday ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி