×

மேட்டுப்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை

புதுச்சேரி,  ஏப். 18: மேட்டுப்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் எலிமருந்து  சாப்பிட்டு தற்கொலை செய்தார். செலவுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் விபரீத  முடிவை அவர் எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முத்திரையர்பாளையம், சேரன் நகர், கம்பன் வீதியில் வசிப்பவர் சுதா. கணவர்  பூங்காவனம் இறந்துவிட்ட நிலையில் கூலி வேலை செய்து மகள் சூர்யாவுடன் (18)  தனியாக வசித்தார். தனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு 18 வயது ஆனதும்  தனது மகளுக்கு திருமண வரண் பார்த்துள்ளார்.அதன்படி விழுப்புரம்  மாவட்டம், திருக்கோவிலூரில் சூர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டு  ஏப்.14ம்தேதி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார்.  இதனிடையே திருமண செலவுக்கு பலரிடம் சுதா கடன் கேட்டிருந்த நிலையில், அவை  ஒவ்வொன்றாக தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கடந்த  9ம்தேதி விரக்தியுடன் வீடு திரும்பிய சுதா, தனது மகளின் சாதக குறைபாடுகளை  சுட்டிக் காட்டி ராசியில்லை... என புலம்பினாராம். இதனால் மனமுடைந்த சூர்யா,  அங்கிருந்த எலி மருந்தை கரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.உடனடியாக  அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.  இதனால் அவரது திருமணம் தடைபட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த சூர்யா, நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து மேட்டுப்பாளையம்  போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mettupalayam ,suicide ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்