×

குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி,  ஏப். 18:  புதுவை, குருசுகுப்பம், மரவாடி வீதியைச் சேர்ந்தவர் தேவராசு  (55). மீனவரான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் தனது அக்காள் விஜயா  பராமரிப்பில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.குடிப்பழக்கம் உடைய  இவர் கடந்த 4, 5 மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால்  செலவுக்கு பணமின்றி அவர் அவதிப்பட்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட  தன்னை கவனித்துக் கொள்வதிலும் தேவராசுக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால்  வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தனது அறையில் கயிற்றால்  தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...