×

திருச்செந்தூரில் மது வாங்கி சென்ற இருவர் கைது 30 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்செந்தூர், ஏப்.18: டாஸ்மாக் கடை தொடர்ந்து விடுமுறை என்பதால் 30 மதுபாட்டில்கள் வாங்கி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கனகராஜன் மற்றும் போலீசார் திருச்செந்தூர் டிபி மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள்(24), ராஜேஸ்(33) ஆகிய 2 பேர் 30 மதுபாட்டில்களை வாங்கி கொண்டு வந்து கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் தலா 15 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : men ,Tiruchendur ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்