×

முள்ளக்காடு அருகே லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்பிக்நகர், ஏப்.18: முள்ளக்காடு அருகே பைக் மீது லாரி மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.தூத்துக்குடி தாளமுத்துநகர் பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் மணிகண்டன்(30). இவர் கட்டிட தொழிலாளியான இவர் நேற்று வேலை விஷயமாக தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் அழகுமுத்து(35) என்பவருடன் பைக்கில் ஆத்தூருக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். முள்ளக்காடு அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்ற லாரியும் பைக்கும் மோதிக்கொண்டன.இதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மணிகண்டனின் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில் பலத காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அழகுமுத்து படுகாயமடைந்தார். தகவலறிந்த முத்தையாபுரம் எஸ்ஐ ராஜபிரபு மற்றும் போலீசார் காயடைந்தவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் பலியான மணிகண்டனின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மணிகண்டனுக்கு முத்துவள்ளி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராஜாவை கைது செய்தனர்.

Tags : Larry ,collision worker ,Mullakkadu ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி