×

திருச்செந்தூர் அருகே நகையை திருப்பி கேட்ட மகளை தீயில் தள்ளி கொல்ல முயற்சி தாய், தம்பி மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூர், ஏப். 18: திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கீழத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களது மகள் பவித்ரா (21). திருமணமாகி மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி தனது சகோதரி பப்பியின் திருமணத்திற்காக 5 பவுன் நகையை தனது தாய் மணியம்மாள், தம்பி ஜெயசந்திரசேகர் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் நீண்ட நாட்களாகியும் நகையை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தாய், மகள், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16ம்தேதி விஜயலட்சுமி அருகில் உள்ள ரேஷன் கடையில் மண்ணெண்ெணய் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தாய் மணியம்மாள், தம்பி ஜெயசந்திரசேகர் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விஜயலட்சுமி நகை திரும்ப தரும்படி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி வீட்டின் வெளியில் உள்ள குப்பையில் கொட்டி தீ வைத்தனர். இதில் தீ மளமளவென்று பரவி கொளுந்து விட்டு எரிந்தது. திடீரென இருவரும் தீயில் விஜயலட்சுமியை பிடித்து கீழே தள்ளினர். இதில் உடல் கருகிய அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்ஐ கனகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி மணியம்மாள், அவரது மகன் ஜெயசந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

Tags : brother ,Tiruchendur ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...