×

வி.கே.புரம், மானூரில் மத்திய போலீஸ் அணிவகுப்பு

வி.கே.புரம். ஏப். 18:  தமிழகத்தில் இன்று மக்களவை தேர்தல் நடைபெறுவதை யொட்டி பொதுமக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி வி.கே.புரம், மானூரில் மத்திய போலீஸ் படை அணிவகுப்பு நடந்தது.           வி.கே.புரம் கிருஷ்ணன் கோயில் அருகிலிருந்து மத்திய ரயில்வே போலீஸ் படை அணிவகுப்பு நடந்தது. அம்பை டிஎஸ்பி ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். தொடர்ந்து வி.கே.புரம் மெயின்ரோடு வழியாக வி.கே.புரம் காவல்நிலையம் வரை சென்றது. இதில் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, மற்றும் போலீசார், மத்திய ரயில்வே போலீசார்  பங்கேற்றனர். இதேபோல் மானூர் போலீஸ் சரகம் மற்றும் தேவர்குளம் போலீஸ் சரகத்தில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படை அணி வகுப்பு நடந்தது. தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ், எஸ்.ஐக்கள் பாலகிருஷ்ணன், மாடசாமி மற்றும் துணை ராணுவப்படையினர் 100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தி உக்கிரன்கோட்டை, அழகியபாண்டியபுரம், தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட இடங்களில் அணிவகுத்து வந்தனர். 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்யவும், அனைத்து வாக்கு மையங்களிலும் போதிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

Tags : Central Police ,parade ,VK Tower ,Manur ,
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு