×

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

நெல்லை, ஏப்.18: அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஜூன் 2019ல் நடைபெறஉள்ள தொடக்ககல்வி பட்டயத்தேர்வுகள் 14.6.2019ல் தொடங்கி 29.6.19 வரைநடைபெறஉள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தல் விண்ணப்பத்தையும் 3 பக்க அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்யவேண்டும்.  பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி ெபற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொண்டபின் தேர்வு கட்டணம் செலுத்த தேர்வரே நேரில் செல்லவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டிற்கும் தலா ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.50 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பங்களை 23.4.2019 முதல் 30.4.2019வரை வாய்ப்புள்ளது. தகுதியற்றவர்களின் விண்ணப்பங்கள் முன்னறிவிப்பின்றி ரத்துசெய்யப்படும். தபால்வழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Individuals ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!