×

முத்தாலங்குறிச்சி கோயில்களில் சித்திரை விசு திருவிழா

செய்துங்கநல்லூர், ஏப்.17: செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயிலில் சித்திரை விசுவை முன்னிட்டு அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார்.முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் நல்லாண்பிள்ளை பெற்றவள் என்ற குணவதியம்மன். இந்த கோயிலில் சித்திரை விசு திருவிழா நடந்தது. இதையொட்டி  முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி பிள்ளையார் கோயிலில் இருந்து  சீர் வரிசை பொருள்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார்.  தொடர்ந்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன் பின் சப்பரத்தில் அம்மன் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். இதில் கட்டளைதாரர் அங்கப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இளைஞர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  கோயில் அர்ச்சகர்கள் சுந்தரம், முருகன், சிவா, கல்யாணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  சப்பர பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அதன் பின் சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின் சப்பரத்தில் அம்மன் கருங்குளம் ஆற்றில் தீர்த்தமாட கிளம்பினார். அங்கு தீர்த்தமாடிவிட்டு மதியம் மீண்டும் செய்துங்கநல்லூர் நோககி கிளம்பினார்.  வரும் வழியில்  கீழதூதுகுழி, மேலத்தூதுகுழி ஆகிய இடங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் செய்துங்கநல்லூர் அன்னதான சத்திரத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார்.  கஸ்பா வேளாளர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் தெரு, புது தெரு, தென்னஞ்சோலை, வி.கோவில்பத்து வழியாக அம்மன் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு  பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் சண்முகசுந்தரம் கம்பர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags : festival ,Chithirai Vila ,temples ,Muthalankurichi ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...