×

திருச்சி, ரங்கம் பகுதிகளில் அமமுக வேட்பாளர் சாருபாலா மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப்.17:  திருச்சி, ரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டமான் நேற்று காலை திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே இருந்து பிரசாரத்தை துவங்கி புத்தூர் நால்ரோடு, தென்னூர், தில்லைநகர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம், மாம்பழச்சாலை, திருவானைக்காவல், அம்மா மண்டபம் வழியாக சென்று ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாநகராட்சி மேயராக பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். தற்போது தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துரோக ஆட்சி முடிய வேண்டும் என்றால் வருகின்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பரிசு பெட்டக சின்னத்துக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மேலும் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும்  வெற்றி பெற செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் துரோக அரசு தூக்கி எறியப்படும். அதே போன்று மத்தியில் இருக்கின்ற பாசிச அரசும் தூக்கி எறியப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திருச்சி வாழ் மக்கள் நாளைய நம்பிக்கை நட்சத்திரமான கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கரத்தை வலுப்படுத்தும் விதமாக திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளராக நிற்கின்ற சாருபாலா தொண்டைமான் ஆகிய எனக்கு பரிசு பெட்டக சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பிரசாரத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில். மாநில அமைப்புச் செயலாளர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : constituencies ,Tirunelveli ,Trichy ,
× RELATED 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...