×

கந்தர்வகோட்டையில் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

கந்தர்வகோட்டை, ஏப்.17:  கந்தர்வகோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை அளிப்பதற்கு பயமின்றி இருக்க வலியுறுத்தி சிறப்பு போலிசாருடன் உள்ளூர் போலீசாரும் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.திருச்சி மக்களவை தொகுதியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி இடம் பெற்றுள்ளது. நாளை மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 237 வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 20க்கும் மேற்பட்ட வாக்குசாவடி மையங்கள் பதட்டமான வாக்குசாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஒரிசாவிலிருந்து வந்துள்ள ஆயுதப்படை சிறப்பு போலீசார் 200 பேருடன் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள 30 போலீசார் மற்றும் கந்தர்வகோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த 15 போலீசார் கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர். கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் ஒரிசா ஆயுதப்படை கூடுதல் எஸ்பி சிங் முன்னிலையில் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. மக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க உறுதி கொடுத்தனர்.

Tags :
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்