×

தலைஞாயிறு பேரூராட்சியில் ஒருமாதமாக செயல்படாமல் கிடக்கும் நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் கடும் அவதி

வேதாரண்யம், ஏப்.17: தலைஞாயிறு பேரூராட்சியில் ஒருமாதமாக செயல்படாமல் கிடக்கும் நீர்த்தேக்க தொட்டியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு  பேரூராட்சியில் வண்டல் குண்டூரான்வழி செல்லும் வலம்புரி சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  வைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்கத்தொட்டி கடந்த ஒருமாத காலமாக தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கோடைகாலத்தில் தண்ணீர் பிடிக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியிலேயே நிலத்தடி நீர் எடுத்து குடிநீர் தேக்க தொட்டி அருகே மின்மோட்டார் அமைத்து தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒருமாத காலமாக குடிநீர் தேக்க தொட்டி இயங்காததால் பொதுமக்கள் குடிதண்ணீர்க்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு நிர்வாகத்திடம் கூறியும், இதுவரை சரிசெய்யப்படவில்லை. எனவே போர்கால அடிப்படையில் கோடைகாலத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அதனை  சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது