×

கீழ்வேளூர் அடுத்த குருமனாங்குடி அருகே ராட்சத குடிநீர் குழாய் இணைப்பில் விரிசல் ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீர் வீணாகும் அவலம்

கீழ்வேளூர், ஏப்.17: கீழ்வேளூர் அடுத்த குருமனாங்குடி அருகே ராட்சத குடிநீர் குழாய் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீர் வீணாகி வருகிறது.நாகை நகராட்சிக்கு குடி நீர் கீழ்வேளூரை அடுத்த குருமனாங்குடி அருகே உள்ள  பகுதியில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு  சமார் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலத்தடியில் பெரிய குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாயில் கீழ்வேளூரில் கடைத்தெரு அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றை கடந்து செல்ல ஆற்று பாலத்தின் அருகே மேல் பகுதியில் இரும்பு குழாய் மூலம்  குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் இரும்பு குழாய் இணைப்பில்  விரிசல் ஏற்பட்டு அதிக அளவில் குடிநீர் விணாகி வருகிறது. நாகைக்கு செல்லும் வழியில் பூமிக்குள் பதிக்கப்பட்ட குழாய் கீழ்வேளூர், சிக்கல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குழாயில் வரும்போதும், தண்ணீர் வெளியேறுவதும், தண்ணீர் நின்ற உடன் வெளியேரிய தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் சென்று குடிநீரை மாசு ஏற்படுத்துகிறது. உடனே நாகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சரி செய்திட வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Krishnankudi ,Kilaveloori ,drinking water tap ,river ,Ottampoky ,
× RELATED ஏரல் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலை சேதம்