×

முசிறியில் இறுதிக்கட்ட பிரசாரம் காவிரியில் கொரம்பு, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சிவபதி உறுதி

தா.பேட்டை, ஏப்.17:   பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி தொண்டர்களின் பேரணியுடன் முசிறியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி நேற்று திருச்சி மாவட்டம், முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிரசாரம் மேற்கொண்டார். தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். முசிறி கைகாட்டியில் வேட்பாளர்  சிவபதி பேசுகையில் நான் அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட முயற்சியின் பலனாக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முசிறியில் ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகமும், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை நான்கு வழிச்சாலையும்  செயல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நான்கு வழிச்சாலைக்கு திட்ட மதிப்பீடு  நடைபெற்று கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் கொரம்பு, விவசாய மற்றும் குடிநீர்  பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வு காண எனக்கு வாக்களியுங்கள். இப்பகுதியில்  குறைகளை நன்கு அறிந்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெரம்பலூர் எம்பியாக  என்னை தேர்வு செய்யுங்கள் என்றார். அப்போது  புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி, முசிறி எம்எல்ஏ  செல்வராஜ் மற்றும் அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட  பலர் உடனிருந்தனர்.

Tags : Sitapi ,Perambalur AIADMK ,Kaveri ,
× RELATED அதிமுக நிர்வாகி காரில் ரூ.8.50 லட்சம் பறிமுதல்