கரூர், ஏப். 17: கரூர் பொன்நகர் பிரிவு அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரை அடுத்து பொன்நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து தாந்தோணிமலை, ஒத்தையூர், பால்வார்பட்டி, கோடங்கிப்பட்டி போன்ற பகுதிகளுக்கான சாலைகள் பிரிகிறது.பொன்நகர் பிரிவு பகுதியில் ஏற்கனவே, இருந்த நிழற்குடை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அகற்றப்பட்டது. தற்போது வரை புதிதாக நிழற்குடை அமைக்கப்படவில்லை.இதனால், பள்ளி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை கொளுத்தும் வெயிலில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர்.எனவே, ஏற்கனவே, இருந்த நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.