×

குழந்தைகளை வைத்து பிரசாரம் நாம் தமிழர் கட்சியினருக்கு ஆத்தூர் டிஎஸ்பி எச்சரிக்கை

கெங்கவல்லி, ஏப்.17: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி பகுதியில் கட்சியின் பொறுப்பாளர் பொன்னுசாமி தலைமையில் நேற்று பிரசாரம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்திய ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  உடனே, அவர் கட்சி நிர்வாகி பொன்னுசாமியை அழைத்து விசாரித்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது என எச்சரித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : children ,Tamils ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...