×

சேலம் அன்னதானப்பட்டியில் 10 ரவுடிகள் கைது

சேலம், ஏப்.17: சேலம் மாநகர பகுதியில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதன்படி அன்னதானப்பட்டி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மணியனூரை சேர்ந்த பிரபல ரவுடிகளான வெங்கடேஷ் (40), சதீஸ்குமார் (35), மணிகண்டன் (28), பிரவீன் (22) ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.இதேபோல் மூனாங்கரடு காளியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ஜான்பாஷா (27), சையத் காதர் பாஷா (27), தர்மராஜ் (24), சங்கர் என்ற வெட்டுவா சங்கர் (27), பூபதி (26), சேட்டு (23) ஆகிய 6 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைதான 10 பேர் மீதும் பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க திட்டமிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,rounds ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...