×

பருவமழை குறைந்ததனால் காலிபிளவர் வரத்து சரிவு

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை குறைந்ததால், காலிபிளவர் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அடுத்த அன்னசாகரம் அருகே பகுதிகளில் நெல், மரவள்ளி, தக்காளி, கம்பு, ராகி போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி அடுத்த அன்னசாகரம், கொல்லஅள்ளி, இண்டூர், பென்னாகரம் பகுதிகளில் குளிர் பிரதேசத்தில் விளையும் காலிபிளவர் பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் காலிபிளவர் காய்பிடிப்பது தள்ளி போகிறது. எனவே காலிபிளவர் மகசூலும் குறைவாகவே இருக்கும். காய்கறி மார்க் கெட்டிற்கு, ஓசூரில் இருந்து வரும் காலிபிளவர் காய்களும் வரத்து குறைவாக உள்ளதால், ஒரு பூ ₹35 முதல் அதிகபட்சமாக ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Coldplayer ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா