×

சாத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இறுதிகட்ட பிரச்சாரம்

சாத்தூர், ஏப். 17: சாத்தூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நேற்று இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் ராஜவர்மன் இறுதிகட்ட பிரச்சாரத்தில் பேசும்போது,  சாத்தூர் தொகுதியில் அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் கொண்டு வந்துள்ளோம். இனியும் இந்த வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இரட்டை இலை சின்னத்திற்கும், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு கொட்டும் முரசு சின்னத்திற்கும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும். சாத்தூர் வெங்கடசலபுரம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வு பணி முடிந்த நிலையில் அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி  குடிநீர் கிடைக்க நவடிக்கை எடுப்பேன். பட்டாசு,  தீப்பெட்டி தொழிலையும், தொழிலாளர்களை பாதுகாக்க பாடுபாடுவேன். சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். சாத்தூர் தொகுதி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பஸ் வழித்தடம் ஏற்படுத்திக்கொடுப்பேன். விசைதறி,கைதறி தொழிலாளர்கள் வாழ்வாதரத்தை உயர்த்திட படுபடுவேன் என்று பேசினார்.

Tags : AIADMK ,candidate ,Sattur ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...