×

பெரியகுளத்தில் பரிவட்டம் யாருக்கு? இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு சிறுமியை சீரழித்த முதியவருக்கு ஆயுள்

தேனி, ஏப்.17: தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெருவில் குடியிருக்கும் 5 வயது சிறுமி, பழைய டிவிஎஸ் ரோட்டில் வசிக்கும் தோழி வீட்டிற்கு கடந்த 19.05.2017 அன்று சென்றாள். அப்போது, தோழி வீட்டில் யாரும் இல்லை. அங்கே தோழியின் தாத்தா செல்லத்துரை(60) மட்டும் இருந்தார்.
அவர் சிறுமியை வீட்டிற்குள் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாயார் தேனி போலீசில் புகார் அளித்தார்.தேனி போலீசார் செல்லத்துரை மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகா நேற்று தீர்ப்பளித்தார். செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Tags : elderly ,Who Durable Vote Collection ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்