×

முதுகுளத்தூர், கடலாடியில் மத்திய அதிவிரைவு படை அணிவகுப்பு

சாயல்குடி, ஏப்.17: முதுகுளத்தூர், கடலாடியில் பதட்டமாக பகுதிகளில் மத்திய அதிவிரைவு படையினரின் அணிவகுப்பு நடந்தது.
முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளிலுள்ள கரும்புள்ளி கிராமங்கள், குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பதட்டமான பகுதிகள், தேர்தல் நேர பதட்டமான பகுதிகள் மற்றும் தாலுகா அளவில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் மக்களவை தேர்தல் நாளை நடப்பதால் நேற்று உள்ளூர் போலீசாருடன், மத்திய அதிவிரைவு அதிரடிபடை போலீசார், கண்ணீர் புகை வாகனம், கலவர தடுப்பு வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தி கிராமங்களில் அணிவகுப்பு செய்தனர். முதுகுளத்தூர் அருகே காக்கூர், புளியங்குடி, முதுகுளத்தூர், கடலாடி அருகே உள்ள மாரந்தை உள்ளிட்ட கிராமங்களில் முதுகுளத்தூர் டி.எஸ்.பி ராஜேஸ் தலைமையில் அணிவகுப்பு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்,கலையரசன் கலந்து கொண்டனர்.

Tags : Mudukulathur ,Central Superintendent ,Marathuvil ,
× RELATED கமுதி அருகே வேளாண் கல்லூரியில் மகளிர் தின விழா