×

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

மதுரை, ஏப். 17: ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டியை சேர்ந்த கற்பூரம் மகன் கண்ணன் (எ) குருவிக்கண்ணன் (30), கடந்த 2014ல் அதே ஊரைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிந்து எம்.சத்திரப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குற்றம்சாட்டப்பட்ட குருவிக்கண்ணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். வழக்கில் அரசுத்தரப்பில் உமாராணி ஆஜரானார்.

Tags : jail ,girls ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!