×

நாகையிலிருந்து திருவாரூர் வழியாக பகல் நேர ரயில் சேவை அதிமுக வேட்பாளர் சரவணன் உறுதி

நாகை, ஏப்.17: நாகையிலிருந்து திருவாரூர் வழியாக பகல்நேர ரயில் சேவை துவங்கப்படும் என அதிமுக வேட்பாளர் தாழை.சரவணன் கூறினார்.நாகை மக்களளை  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தழைசரவணன் தனது தேர்தல் பிசாரத்தை  நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி தம்பிதுரைபூங்கா, ஆஸ்பத்திரிரோடு, பாரதிமார்க்கெட், அபிராமி அம்மன் திடல், பப்ளிக்ஆபீஸ்ரோடு வழியாக  மீண்டு பழைய பேருந்து நிலையத்தில் முடித்தார்.  பிரசாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் வேதரெத்தினம், மாவட்ட செயலாளர் வரதராஜன்,  தேமுதிக மாவட்ட செயலாளர் வைரவநாதன், அதிமுக நாகை நகர செயலாளர் தங்ககதிரவன், ஒன்றிய செயலாளர்கள் நாகை குணசேகரன், திருமருகல் ராதாகிருஷ்ணன், வெளிப்பளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சக்திவேல் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசுகையில்,நாகை மக்களவை தொகுதியின் முக்கிய கோரிக்கையான திருவாரூர் -காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்  நாகையில் இருந்து திருவாரூர் வாழியாக பகல் நேரத்தில் ரயில் சேவை தொடங்கப்படும். நாகை நடாளுமன்ற பகுதியில் இருந்து பெரு நகரங்களை இணைக்கும் ரயில் சேவை தொடங்கப்படும்.நாகை  - கோடியக்கரை வரையில் உள்ள மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும். உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தோட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகை நகர மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன். இவ்வாறு பேசினார்.

Tags : candidate ,Sarahan ,AIADMK ,Thiruvarur ,Nagapattinam ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...