×

உத்திரமேரூரில் மக்களவை திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர், ஏப்.17: காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லியங்கரணை, பருத்திக்கொல்லை, பட்டஞ்சேரி, நீரடி, வேட்பாளையம், காக்கநல்லூர், ஆணைப்பள்ளம், சோமநாதபுரம் மற்றும் உத்திரமேரூரில் உள்ள பல பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். கடைசியாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் வியாபாரிகளிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு ேசகரித்து பிரசாரத்தை முடித்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். என்னை வெற்றிபெற செய்தால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என கூறினார்.காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பாரிவள்ளல், சசிக்குமார், காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் மதிவாணன், விசிக நிர்வாகி மல்லிமாறன், வின்சென்ட், சேகர் மற்றும் மதிமுக, இந்திய முஸ்லிம் லீக், சிபிஎம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : G. Selvam ,Lok Sabha ,DMK ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...