×

சுசீந்திரம் அருகே பைக் - டெம்போ மோதல் : இன்ஜி.மாணவர் பலி

சுசீந்திரம், ஏப்.17:  சுசீந்திரம் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் சுமேஷ் (20). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கோகிலன் (20). இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து என்ஜிஓ காலனிக்கு பைக்கில் வந்தனர். கோகிலன் பைக்கை ஒட்டினார். என்ஜிஓ காலனி பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மேலகிருஷ்ணன் புதூருக்கு தர்பூசணி லோடுடன் சென்ற டெம்போவும் பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் சுமேசும், கோகிலனும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுமேஷ் பரிதாபமாக இறந்தார். கோகிலன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து சுமேசின் உறவினர் தாணுமாலயன் அளித்த புகாரின்படி சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bike-Tempo Confrontation ,Susindram ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...