×

வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக புதுவை அமமுக பிரமுகர் சிக்கினார்

புதுச்சேரி,  ஏப். 17:  புதுவை, தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க  முயன்றதாக அமமுக பிரமுகரை ரூ.1 லட்சம் பணத்துடன் பறக்கும் படை பிடித்துச்  சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. புதுவையில் நாளை  (18ம்தேதி) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல்  கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதில் தேர்தல் பறக்கும் படை தீவிர  கவனம் செலுத்தி வருகின்றன.
 இதனிடையே இசிஆரில் தேர்தல் பறக்கும் படை  நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்துபணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த  ஒருவரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர் ரூ.1 லட்சம் வரை பணம்  வைத்திருந்தது தெரியவந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த  வைத்தியநாதன் என்ற அந்த நபரை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை நடத்தும்  தேர்தல் அதிகாரியான சுமித்தாவிடம் ஒப்படைத்தனர்.
 அவரிடமிருந்து பைக்  மற்றும் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் துறை தட்டாஞ்சாவடி தொகுதி  வாக்காளர்களுக்கு அமமுக சார்பில் பணம் கொடுக்க அவர் அதை எடுத்து வந்தது  தொடர்பாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது  உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவார்.

Tags : Amitabh Bachchan ,voter ,
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...