×

செல்வமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் ராதாநகரில் உள்ள செல்வ விநாயகர், செல்வமாரியம்மன் கோயில் 14ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 8ம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணி வரை பொட்டுசாமி பொங்கல், 9ம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 12 மணி வரை கம்பம் போடுதல், பொரி மாத்துதல் கங்கனம் கட்டுதல், தீர்த்தம் செல்லுதல், 10ம் தேதி மாலை 3 மணிக்கு முளைப்பாரி எடுத்து செல்லுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு 9 முதல் 11 மணி வரை அம்மன் அழைத்தல், 11ம் தேதி காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை மாவிளக்கு, உச்சி கால பூஜை, பூவோடு எடுத்தல், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை பொங்கல், கிடாய் வெட்டு நடந்தது. 12ம் தேதி மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை மஞ்சள் நீர் தெளித்தல் நிகழச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள், கோவில் கமிட்டியினர், இளஞைர் அணியினர் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

Tags : Pongal Festival ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா