×

புதுக்கோட்டை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.16: திருச்சி மக்களை தொகுதியில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுகரசர் நேற்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றண்டார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராக்கத்தம்பாட்டி, காயம்பட்டி, கிள்ளுக்கோட்டை, மேலப்பட்டி, செங்களூர்,கீழையூர்,விசலூர், புலியூர், வெண்ணமுத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதபோல் நேற்று மாலை புதுக்கோட்டை ராஜகோபாலபுரம், சார்லஸ் நகர், மேல ராஜவீதி, கீழ ராஜவீதி உள்ளிட்ட புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின்போது திருநாவுக்கரசு பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் புதுக்கோட்டை நகர் பகுதியின் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடுவேன். இளைஞர்களுக்கு வேலைவாயப்பு கிடைக்கும் வகையில் என்னுடைய பணி இருக்கும். ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் என வருடம் ரூ.72 ஆயிரம் பணம் வழங்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து நலத்திட்டங்களையும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றார். இந்த பிரசாரத்தின்போது காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கைசின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : candidate ,Congress ,village ,area ,Pudukottai ,Thirunavukkarar ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...