தா.பேட்டை, ஏப்.16: முசிறி வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் முசிறியில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாணிக்கராமசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்ககத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசு ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுபோல் உள்ளாட்சி நிதித்துறை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசாணை நிலை எண் :222 நிதி (ஓய்வூதியம்) துறையினால் 30.6.2018ன்படி உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்ககத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்த தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.