×

மருத்துவமனை வளாகத்தில் விபத்து மருத்துவர் கார் ஏறியதில் முதியவர் கால் முறிந்தது

கெங்கவல்லி, ஏப்.16:  கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி(55). இவரது 2வது மகள் கடந்த 13ம் தேதி பிரசவத்திற்காக கெங்கவல்லி-ஆத்தூர் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, மகளுடன் இருந்து பெரியசாமி கவனித்து வந்தார். இரவு நேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கார் நிறுத்துமிடத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

இதை கவனிக்காமல் மருத்துவர் ஒருவர், தனது காரை ரிவர்ஸ் எடுத்த போது, எதிர்பாராதவிதமாக பெரியசாமி மீது கார் ஏறியது. இதில், பெரியசாமியின் வலது கால் முறிந்தது. வயிற்றிலும் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பெரியசாமியின் மனைவி இந்திராணி கொடுத்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : hospital doctor ,hospital premises ,
× RELATED ராயல்கேர் மருத்துவமனை டாக்டருக்கு விருது