×

வேப்பனஹள்ளியில் அதிமுக மாஜி கவுன்சிலர் வீட்டில் திடீர் சோதனை

வேப்பனஹள்ளி, ஏப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே, பூதிமுட்லு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். முன்னாள் அதிமுக கவுன்சிலர். நேற்று மாலை இவரது வீட்டிற்கு, பறக்கும் படை அதிகாரி  பன்னீர்செல்வம் தலைமையில் வந்த அதிகாரிகள், வீடு மற்றும் ஜீப் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக வந்த தகவலின் பேரில், இந்த சோதனை நடந்தது தெரியவந்தது. ஆனால், சோதனையில் ராஜேந்திரன் வீட்டில் பணம் ஏதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து, பறக்கும் படையினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.  வேப்பனஹள்ளியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் வீட்டில் பறக்கும் படை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, வேப்பனஹள்ளியில் அதிமுக பிரமுகர் சாந்தி என்பவரது ஜூவல்லர்ஸ்சில் தற்போது சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Tags : councilor ,home raid ,Wepanahalli ,
× RELATED பாஜ கவுன்சிலர் கைது