×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாஜி படைவீரர்களுக்கு அழைப்பு

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(பொ) பிரபாகர் (ஓய்வு) தெரிவித்திருப்பதாவது: நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு., தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவல் அலுவலராக நியமிக்கப்பட உள்ளதால், வரும் 16ம் தேதி மதியம் 2 மணிக்கு தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலக மைதானத்தில், மூன்று நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய உடைமைகளுடன் சீருடை அல்லது சிவில் டிரஸ்சில் வர வேண்டும். தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு எஸ்பி அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், இவ்விரண்டு அலுவலகத்தில் விருப்பம் தெரிவிக்காதவர்கள் கூட, 16ம் தேதி அன்று மதியம் நேரில் வருகை தந்து விருப்பத்தினை தெரிவித்து தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு செல்லலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : soldiers ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை