×

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர் இன்று ஆஜராக உத்தரவு

விருதுநகர், ஏப்.16: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் ராணுவத்தினர் இன்று காலை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.18 வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் பணியாற்ற இதுவரை விருப்பம் தெரிவித்த, விருப்பம் தெரிவிக்காத முன்னாள் படைவீரர்கள் சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்.16(இன்று) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும்.

ஏப்.16 முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் பணியாற்ற வேண்டும். பணியாற்ற வரும் முன்னாள் படைவீரர்கள் சீருடை தேவையில்லை. எஸ்பிஓ பேட்ஜ் மட்டும் அணிய வேண்டும். முன்னாள் படைவீரர் அ டையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஒருநாளுக்கான உணவு, குடிநீர் மற்றும் 4 நாட்களுக்கு தேவையான உடை, படுக்கை, மற்றும் தேவையான பொருட்கள் கொண்டு வர வேண்டுமென கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Tags : army personnel ,
× RELATED சிக்கிமில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்...