சிவகாசி, ஏப். 16: சிவகாசி பகுதியில் காணாமல் போன இளம்பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி முண்டக நாடார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி ஆதிலட்சுமி(26). வெங்கடேஷ் வீட்டு செலவிற்கு பணம் தராமலும், வெளியில் அடிக்கடி கடன் வாங்கி குடும்பத்தை கவனிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி, கடிதம் எழுதி வைத்துவிட்டு இரு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.
இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிலட்சுமியை தேடி வருகின்றனர். இதே போன்று திருத்தங்கல்லில் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. முத்தாலபுரம் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் 4 நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.