×

நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சில் திடீர் புகை; பயணிகள் அலறல்

வத்தலக்குண்டு, ஏப்.16: நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சில் புகை கிளம்பியதால் பயணிகள் அலறி அடித்து இறங்கினர். மதுரையில் இருந்து அரசு பஸ் ஒன்று வத்தலக்குண்டு நோக்கி நேற்று புறப்பட்டது. வத்தலக்குண்டு நிலக்கோட்டை சாலையில் கருப்பணசாமி கோவில் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியிலிருந்து புகை கிளம்பி பஸ்சுக்குள் பரவியது. புகையை பார்த்த பயணிகள் அலறினர். டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். பயணிகள் முண்டியடித்து கீழே இறங்கினர். டயர் பகுதியிலிருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டிருந்தது. பயணிகள் வேறு அரசு பஸ் மூலம் மாற்றி அனுப்பப்பட்டனர். வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து பஸ்களையும் சரியான முறையில் பராமரித்து பின்னர் பயணத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பயணிகள் கூறினர்.

Tags : Nilkottai ,
× RELATED திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை...