×

பண்டாரவாடையில் இருந்து தேவராயன்பேட்டைக்கு செல்லும் சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை பொதுமக்கள் அவதி

பாபநாசம், ஏப். 16: பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் இருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தேவராயன்பேட்டை ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பண்டாரவாடையில் இருந்து தேவராயன்பேட்டை வழியாக மெலட்டூர் பேரூராட்சிக்கு செல்லலாம். பண்டாரவாடையில் இருந்து தேவராயன்பேட்டை செல்லும் சாலையில் ஒரு தெருவிளக்கு கூட எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த ஊராட்சிக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இரவு நேரங்களில் சாலையோர மின்விளக்குகள் எரியாத காரணத்தால் ராஜகிரி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாங்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறோம். கணக்கு காட்ட மட்டுமே உள்ளாட்சி நிர்வாகம் இருப்பதால் உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்கிறார்.

Tags : Devarayanpattu ,public ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு